எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த தலைமுறையை யுத்தத்தில் பலியாக்க தயாராக இல்லை.
அதிகாரத்தை பகிர்ந்தளித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
அதன் ஊடாகவே மக்களின் நிம்மதியான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் எனவும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.