கோடிஸ்வரர் சுலைமான் கொலை – 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம்

284 0

sulaiman-1பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில், 8 வர்தகர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இவர்கள், கொலை செய்யப்பட்ட மொஹமட் சுலைமானுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே இந்த கொலை தொடர்பில், கொழும்பு – கண்டி பிரதான நீதியில் இருந்து மாவனெல்ல வரையிலும், மாவனெல்லயில் இருந்து ஹெம்மாத்தகம வரையிலும் உள்ள சி.சி.டி.வி கமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கொழும்பில் இருந்து பம்பலப்பிட்டி வரையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமிராக்களின் காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றதடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.