இந்த வருடத்தில் ஜெர்மனுக்கு சுமார் 3 லட்சம் அகதிகள் மற்றும் குடியேற்ற வாசிகள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் பிரேங் ஜுவர்ஜென்வேய்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பததை விடவும் அதிக எண்ணிக்கையில் பாதிப்படைந்த அகதிகள் ஜெர்மனுக்கு வருகை தருவார்களானால் அது தமக்கு பெரும் பிரச்சினையாக அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட அகதிகள் ஜெர்மனுக்கு வருகை தந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருட முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதி அந்தஸ்து கோரி ஜெர்மனியிடம் விண்ணப்பத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.