துருக்கி மேற்கொண்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் பலி

312 0

20111229-145206துருக்கிய இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில், சிரிய பொதுமக்கள் 35 பேர் பலியாகினர்.

வான் தாக்குதல் காரணமாக வடக்கு சிரியாவில் 50 பொது மக்கள் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் துருக்கிய கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்தே இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.