கணவன் பிரசவம் பார்த்ததால் மனைவி மரணம்

310 0

wife_death_while_stop_fighting-5-673x380மனைவியில் பிரசவ சிகிச்சை கணவரால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 36 வயதான 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கல்பிட்டி புலச்சேன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் அவர் பிரசவித்த ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கல்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

குழந்தையின் தொப்புல் கொடி கணவரால் வெட்டிய நிலையில் இந்த சம்பவம் 8 தினங்களில் பின்னர், அதாவது நேற்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில், கல்பிட்டி காவல்துறையினரிடம் வினவியபோது, குழந்தை பிரசவம் தொடர்பான தாய் நல திட்டங்கள் எதுவும் பதிவு செய்யப்பட்டவில்லை என குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பலியான தாய், இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் குழந்தை பிரசவித்துள்ள நிலையில், கணவரே அவருக்கு பிரசம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.