பட்டம் விடும் பொழுது அவதானம் தேவை – இலங்கை வான்படை

362 0

kites-2அதிகளவில் வானூர்திகள் பயணிக்கும் வான்பரப்புகளில் பட்டங்களை பறக்கவிடுவது ஆபத்தை விளைவிக்க கூடும் என இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.

சர்வதேச பயணிகள் வானூர்திகள், வான்படைக்கு சொந்தமாக வானூர்திகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுப்படும் வானூர்திகள் இதனால் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என வான்படை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இரத்மலானை, நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் பட்டம் பறக்கவிடும் போது அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.