தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கவலை

275 0

தேர்தல் நடாத்துவது தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிப்பதாகவும் அதிருப்தியுடன் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும், அதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய செயற்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தனக்கு செய்வதற்கு எதுவும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (22) இடைக்கால தடை  உ த்தரவைப் பிறப்பித்துள்ளது.

Leave a comment