சைட்டம் தனியார் வைத்தியக்கல்லூரியை தடை செய்வது தொடர்பான வர்த்தமானியை வௌியிடுமாறு கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது.
சைட்டம் நிறுவனத்தை தடைசெய்வது மட்டுமின்றி,குறித்த நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர்களுள் வைத்தியபீடத்திற்கு தெரிவு செய்யக்கூடிய மாணவர்களுக்கு வைத்திய கற்கை நெறிக்காக வாய்ப்பினை வழங்குமாறும்,இதற்கென வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியபீடத்தினை பயன்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சைட்டம் நிறுவனத்தை தடைசெய்யுமாறு ஹர்ஸ த சில்வா குழுவினால் அறிக்கை வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனைத் குழப்புவதற்கு பலர் முயற்சிப்பதாகவும் லஹிரு சுட்டிக்காட்டியுள்ளார்.