தெற்காசிய மருத்துவ சங்கத்தின் 3ஆவது மாநாடு!

349 0

இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை இடம்பெறும் பாலியல் சுகாதாரம் தொடர்பான தெற்காசிய மருத்துவ சங்கத்தின் 3ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  ஆரம்பமாகியது.

இம் மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய விசேட நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

“உடல், உள மற்றும் மருத்துவ ரீதியில் பாலியல் மருத்துவத்தின் புதிய எல்லைகள்” என்ற தொனிப்பொருளில் நடை பெறும் இம் மாநாடானது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பாலியல் சுகாதாரத்துடன் தொடர்புடைய புதிய மருத்துவ முறைகள் பற்றிய விரிவுரைகள் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளதுடன், பாலியல் சுகாதாரம் சம்பந்தமான மருந்துகளின் அண்மைக்கால ,முன்னேற்றம் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்கள் தொடர்பாகவும் கருத்துக்கள்முன்வைக்கப்படவுள்ளன.

முதல் இரண்டு மாநாடுகளும் முறையே  இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் நடைபெற்றுள்ளன.குறித்த மாநாட்டின் நேற்றைய ஆரம்ப  நிகழ்வில் சங்கத்தின் முன்னாள் தலைவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகள் வழங்கி கௌரவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment