ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிர­தமர் ரணில்!

396 0

மத்­திய வங்­கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி  விசா­ரணை  ஆணைக்குழுவில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சற்று முன்னர் ஆஜராகி உள்ளார்.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு முன்­னி­லையில் ஆஜ­ராக கடந்த வியா­ழக்­கி­ழமை  விடுக்­கப்­பட்ட அறி­வித்தலின் பிர­கா­ரமே அவர் இவ்­வாறு ஆஜ­ரா­கியுள்ளார்.

கடந்த 2015 பெப்­ர­வரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில்  நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி  கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் தொடர்ச்­சி­யாக கடந்த 9 மாதங்கள் சாட்சி விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, தனது சாட்சி விசா­ர­ணை­களை கடந்த ஒக்­டோபர் 17 ஆம் திக­தி­யுடன்  நிறை­வுக்கு கொண்டு வந்­தது.  எனினும் அவ­சியம் ஏற்­ப­டு­மாயின் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்­களை நேர­டி­யாக விசா­ரணை செய்ய ஆணைக்­கு­ழு­வுக்கு அழைப்­ப­தா­கவும் அன்­றைய தினம் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் தலைவர் நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சிரி அறி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு பதி­ல­ளிக்­க­வென கேள்விக் கொத்­தொன்­றினை ஆணைக் குழு அவ­ரது அலு­வ­ல­கத்­துக்கு  அனுப்பி வைத்­த­துடன் ,  அவற்­றுக்கு பதிலை சத்­தியக் கட­தா­சி­யொன்­றூ­டாக பிர­தமர் ரணில் வழங்க வேண்டும் எனவும் ஜனா­தி­பதி ஆணைக் குழு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.  முதல் கேள்விக் கொத்­துக்­கான பதில் கிடைத்த பின்னர் மீளவும் கேள்விக் கொத்­தொன்றை அனுப்­பி­யுள்­ளது. அதற்­கான பதி­லு­ட­னேயே இன்று பிர­தமர் ஆணைக் குழ்வில் ஆஜ­ரா­கியுள்ளார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் 27 ஆம் திக­தி­யுடன் நிறைவு பெற்ற ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் கால­மா­னது டிசம்பர் மாதம் வரை நீடிக்­கப்­பட்­டதை தொடர்ந்து மேல­திக சாட்சிப் பதி­வுகள் ஆரம்­ப­மா­கின. அதன்­படி பிணை  முறி விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் தப்­புல டி லிவேரா பிர­தமர் ரணிலை ஆணைக் குழு­வுக்கு அழைத்து சாட்சிப் பதிவு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக  ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தார். இந் நிலையிலேயே பிரதமர் ரணிலை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அறிவித்தது.

Leave a comment