சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்!

386 0

வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வினவப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, சர்வேஸ்வரனின் ஆதங்கம் ஒரு விதத்தில் வெளிவந்துள்ளது. எனது ஆதங்கம் இன்னொரு விதத்தில் வந்து கொண்டிருக்கின்றது. அவரின் உணர்ச்சிகளை நான் புரிந்துள்ளேன், மதிக்கின்றேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்.

எமது மன வேதனையை அவ்வாறான புறக்கணிப்பால் எடுத்துக் காட்டாமல் விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. தேசியக் கொடி பௌத்தத்திற்கும் பேரினத்திற்கும் மிகக் கூடிய முக்கியத்துவம் அளித்து இந் நாட்டின் முதல்க் குடியான தமிழர்களுக்கும் முதல் மதமான சைவத்திற்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது உண்மையே.

ஆனால் அந்தப் பிழையை தேசியக் கொடியையோ தேசிய கீதத்தையோ உதாசீனம் செய்து வெளிக்காட்டாது வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்பதே எனது கருத்து. இது தொடர்பான அவரது பதில் மேலே முழுமையாக தரப்பட்டுள்ளது.

Leave a comment