எமக்கு ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சர்வதேசம் கற்பித்துக்கொடுக்கும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அவ்வாறன மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில் உருவாகும் சமாதானத்தை விடவும் மக்கள் இடையிலான புரிந்துணர்வு மூலமாகவே நிரந்தர சமாதானம் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புத்தூரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.