கரடியனாறில் மரம் வெட்டிய கும்பல்: பொலிஸாரைக் கண்டு தப்பியோட்டம்!

369 0

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை (தொப்பிக்கலை) – ஈரக்குலம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் குழு ஒன்று, மாட்டு வண்டியில் சென்று மரங்களை வெட்டிய போது, பொலிசாரை கண்டு, தப்பி ஒடியுள்ளனர். 

இதனையடுத்து, சந்தேகநபர்கள் விட்டுச் சென்ற, ஏழு மாட்டு வண்டிகள், இரண்டு மாடுகள் மற்றும் மரங்களை நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள காட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்பு இடம்பெறுவதாக, பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment