முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம்!

17110 0

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம். முன்பு திறை­சே­ரிக்கு கீழேயே பாரா­ளு­மன்றம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் அதனை மாற்­றி­ய­மைத்து திறை­சே­ரி­யையும் மத்­திய வங்­கி­யையும் பாரா­ளு­மன்­றத்­துக்கு கீழ் கொண்டு வந்­துள்ளோம் .இதன்­படி முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில் ஊழல் புரிந்த அதி­கா­ரிகள் பலரை நீக்­க­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின் கேள்­வியின் போது குறுக்­கிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சே­ரிக்குக் கீழேயே பாரா­ளு­மன்றம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் அதனை மாற்­றி­ய­மைத்து திறை­சே­ரி­யையும் மத்­திய வங்­கி­யையும் பாரா­ளு­மன்­றத்­துக்குக் கீழ் கொண்டு வந்­துள்ளோம் .

முன்­னைய ஆட்­சியின் போது திறை­சேரி செய­லாளர் மத்­திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்­தையே நாம் போக்கி வரு­கின்றோம். இதன்­படி திறை­சேரி , மத்­திய வங்கி,வர­வு­செ­ல­வுத்­திட்ட அலு­வ­லகம் ஆகி­ய­வற்றை பாரா­ளு­மன்­றத்­துக்குக் கீழ் கொண்டு வந்து சீரான நிதி முகா­மைத்துவத்தை ஏற்­ப­டுத்தி எமது காலத்­தி­லேயே முழுக் கட­னையும் செலுத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.

அத்­துடன் தற்­போது பாரா­ளு­மன்ற கோப் குழு உட்­பட ஏனைய குழுக்­க­ளுக்கு எதிர்க்­கட்­சி­யி­ன­ரையே நாம் தலைமைப் பத­விக்கு அமர்த்­தி­யுள்ளோம். எனினும் முன்­னைய ஆட்­சியின் போது எந்தக் குழுவினையும் எதிர்க்கட்சி வழங்க வில்லை. அத்துடன் திறைசேரி உட்பட நிறுவனங்களில் முன்னைய ஆட்சியின் போது ஊழல் புரிந்த அதிகாரிகள் பலரை நீக்கவுள்ளோம்.

Leave a comment