கோப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்!

362 0

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ்ஸூடன் தொடர்புகளை ஏற்படுத்திய கோப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கண்டியில் வைத்து அவர் நேற்று இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளையானது உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய வங்கிக் கொள்ளையாக கருதுவதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதுகெழும்பில்லாத அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருப்பதினாலேயே, தேசிய கொடியை புறக்கணிப்பது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment