கிங்தொட்டை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது!

313 0

காலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

காலி காவல்துறை பிரிவின் கிழக்கு கிங்தொட்டை, மேற்கு கிங்தொட்டை, வெலிபிட்டி மோதர, மஹ ஹபுகல, ருக்வத்த, பியதிகம மற்றும் குருந்துவத்த போன்ற பிரதேசங்களில் நேற்று மாலை ஆறு மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் காலி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட குறித்த பிரதேசங்களில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு பெருமளவிலான காவற்துறையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பின் பொருட்டு நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த பிரதேசங்களில் அமைதியை சீர்குழைக்கும் வகையில் செயற்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment