ஜெலி பக்கட்டுக்களில் போதைப் பொருள் விற்பனை பெண் கைது!

366 0

வீடொன்றில் குளர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஹெரோய்ன் பக்கட்டுக்கள் மற்றும் 15 கே.ஜீ. வகை போதைப் பொருள் பக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஊருகஸ்மங்ஹந்திய – அம்பகஹஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் சம்பவத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் நாய்களின் உதவியுடன், நடத்தப்பட்ட சோதனையில் மிகவும் சூட்சுமமான முறையில் ஜெலி பக்கட்டுக்கள் போன்று தயாரிக்கப்பட்டிருந்த இந்த போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் ஜெலி பக்கட்டுக்களில் போதைப் பொருளை அடைத்து குளர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment