தற்போது நாட்டிற்குள் நிலவுகின்ற நிலையற்ற தன்மை காரணமாக முதலீடுகள் வருவது குறைந்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் வந்த முதலீடுகள் மாத்திரமே தற்போது எஞ்சியிருப்பதாக அவர் கூறியுள்ளார். அபயாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியிருந்தார்.
இதேவேளை கொள்கை அடிப்படையில் வாழாத காரணத்தினால் இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சந்திரிகா பண்டாரநாயக்க இதனைக் கூறியுள்ளார்.