காலியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

341 0

காலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிழக்கு கிங்தொட்டை, மேற்கு கிங்தொட்டை, வெலிபிட்டி மோதர, மஹ ஹபுகல, ருக்வத்த, பியதிகம மற்றும் குருந்துவத்த போன்ற பிரதேசங்களிலேயே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது, நாளை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் அமைதியற்ற தன்மை ஏற்பட்டது.இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு பெருமளவிலான காவற்துறையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இதன்போது அமைதியை சீர்குழைக்கும் வகையில் செயற்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலி பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு இன்று காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் காவற்துறை உயர் அதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment