ஆவா குழுவை இல்லாதொழிக்க அதிக பட்ச நடவடிக்கை!

307 0
வடக்கில் செயற்படுகின்ற ஆவா குழுவை இல்லாதொழிப்பதற்காக முடிந்தளவு அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.

வடக்கில் செயற்படுகின்ற ஆவா கும்பல் மீண்டும் தமது குற்றச் செயல்களை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த ஆவா கும்பலை தலைதுக்க விடுவதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் இதுனுடன் தொடர்புடைய 08 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் மட்டுமல்லாது தெற்கில் இயங்குகின்ற பாதாள உலக கும்பல்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

Leave a comment