ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்!

356 0

ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நிஷா விக்டர் என்பவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே அவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போதும் அவர்களை பிணையில் விடுவிக்க யாரும் முன்வராததால் மீண்டும் சிறையடைக்கப்பட்டனர்.

கோப்பாய் பொலிஸார் மீதான வாள் வெட்டு சம்பவம் தொடர்பாகவே நிஷா விக்டர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் வேறு பல சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave a comment