தெண்டமான் பெயர் நீக்கம் – இலங்கையுடன் பேசுவதாக சுஷ்மா உறுதி

322 0

அரச நிறுவனம் ஒன்றில் இருந்து, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை குறித்து அவதானம் செலுத்துவதாக, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் இயங்கிவந்த தொழில் பயிற்சி நிலையத்தின் பெயரை, பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம் என அண்மையில் மாற்றினர்.

இந்த விடயம் மலையக தமிழர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விடயம் குறித்து, சுஷ்மா சுவராஜூக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கு, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சுஷ்மா, இலங்கை அரசாங்கத்துடன் இது குறித்து பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

Leave a comment