புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தை சட்டமாக்க சட்டமூலம் வருகிறது

293 0

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தைச் சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதாவது, முறைத்தவறிச் சென்ற போர்வீரர்கள், தீவிரவாத அல்லது அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் மற்றும் விஷ ஒளடதங்களுக்கு அடிமையானவர்கள் போன்றவர்களை புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகமயமாக்குவதற்கும் அவர்கள் தொடர்பான பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கும் ஏதுவான வகையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தை நாடாளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment