அபாயகரமான கழிவு முகாமைத்துவத்துக்கு புதிய திட்டம்

5335 0

அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக, முறையான செயன்முறையொன்றைத் தயாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, இலங்கையினுள் அபாயகரமான கழிவுகள், இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்கவே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த செயன்முறையைத் தயாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment