உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் கள­மி­றங்­கும் மகிந்த!

474 0

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் கள­மி­றங்­கு­வ­தற்­கு­ரிய இறுதி முடிவை மகிந்த அணி நேற்று அறி­வித்­தது.

தற்­போ­தைய ஆளுந் தரப்­பி­லுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் இணைந்து போட்­டி­யிட முன்­வ­ரும் பட்­சத்­தில் அவர்­களை உள்­வாங்­கு­வ­தற்­கும் தீர்­மா­னிக்­கப் பட்­டுள்­ளது.

சுதந்­தி­ரக் கட்­சி­யி­லுள்ள மகிந்த அணி­யி­னர் பழி­வாங்­கப்­ப­டு­வ­தால் தனி­வழி செல்­லும் இந்த முடிவு தொடர்­பில் ஆளுங்கட்­சி­யு­டன் எந்­தச் சம­ர­சத்­துக்­கும் செல்­வ­தில்லை என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தொ­கு­தி­யில் நேற்று நடை­பெற்ற மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்­றக்­கு­ழுக் கூட்­டத்­தின்­போதே மேற்­படி முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

‘‘ஏற்­க­னவே பல தட­வை­கள் எமக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நம்பி ஏமாந்­துள்­ளோம். மீண்­டும் அவ்­வாறு ஏமாற நாம் தயா­ராக இல்லை. அர­சின் பக்­கம் இருக்­கும் எவ­ரும் எம்­மு­டன் சேர­லாம். அவர்­க­ளுக்­காக எங்­க­ளது கதவு எப்­போ­தும் திறந்தே இருக்­கும்’’ என்று நேற்­றைய கூட்­டம் தொடர்­பில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா பொது­ஜன பெர­முன (மகிந்த அணி) என்று மும்­மு­னைப் போட்டி இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

Leave a comment