சமுத்தி கொடுப்பனவில் மாற்றமில்லை!

421 0

நடப்பு வரு­டத்­தின் சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் முத்­தி­ரை­கள் வெட்­டப்­பட்­டா­லும் அதன் பின்­ன­ரான நடை­மு­றை­கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்­வ­தில் முன்­னர் எவ்­வா­றான நடை­முறை காணப்­பட்­ட­தோ அந்த நடை­மு­றையே தற்­போ­தும் காணப்­ப­டு­கி­றது.

வரு­மா­னம் அதி­க­ரிப்­போ­ருக்கே அது நிறுத்­தப்­பட்டுள்ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. நடப்பு வரு­டத்­தில் சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் முத்­தி­ரை­கள் வெட்­டப்­பட்­டன. அது நியா­ய­மற்­றது என்று மக்­கள் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டத்­தி­லும் ஈடு­பட்­ட­னர்.

உண்­மை­யில் சமுர்த்தி முத்­தி­ரை­கள் கிடைக்க வேண்­டிய வரு­மா­னம் குறைந்த குடும்­பங்­க­ ளுக்கு சமுர்த்திக் கொடுப்­ப­ன­வு­கள் நிறுத்­தப்­பட்டு, தேவை­யற்­ற­வர்­க­ளுக்கு கொடுப்­ப­வ­னவு வழங்­கப்­ப­டும் நிலை­யில் பெயர்ப் பட்­டி­யில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தொடர்­பிலான மீளாய்வு நட­வ­டிக்கைகள் ஒவ்­வொரு பிர­தேச செய­ல­கங்­க­ளி­லும் நடை­பெற்­றன.

இதன்போது பய­னா­ளி­க­ளின் தெரிவு தொடர்­பில் தவ­று­கள் நடை­பெற்­றமை தெரி­ய­ வந்­தது. இது தொடர்­பில் உரிய திணைக்­கள அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்டு, பெயர்ப்பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்ட முறை­கள் தொடர்­பில் மேல­திக நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டாம், முன்­னர் இருந்த வழ­மை­யான முறை­யில் சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­வும் என்று கொழும்பு அரசு தெரி­வித்து இருந்­தது.

இது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக சமுர்த்­திப் பிரிவு தெரி­வித்­த­தா­வது,

வெளி­யி­டப்­பட்ட சமுர்த்­திப் பய­னா­ளி­க­ளின் விவ­ரங்­கள் ஆரா­யப்­பட்­டன. உண்­மை­யாக வரு­மா­னம் குறைந்­த­வர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய சமுர்த்தி க் கொடுப்பனவு கிடைக்­கவில்லை.

ஆகவே தற்­போது முன்­னர் காணப்­பட்ட முறைக்கு அமை­வாக பய­னா­ளி­கள் தெரிவு நடை­பெற்று வரு­கின்­றது. மாத வரு­மா­னம் அதி­க­மாக உள்­ள­வர்­கள் பய­னா­ளி­க­ளாக உள்­ள­னர் என்­றால், அவர்­க­ளின் சமுர்த்­திக் கொடுப்­ப­ன­வு­களை, மாத வரு­மா­னம் குறைந்­த­வர்­களைத் தெரிவு செய்து வழங்­கும் செயற்பாடு நடை­பெற்று வரு­கின்­றது.

முத்­திரை வெட்­டப்­பட்­டமை தொடர்­பில் பின்­னர் மேற்­கொள்ள வேண்­டிய செயற்றிட்­டங்­கள் யாவும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a comment