யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் வீட்டுத்திட்டம்!

23812 0

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வீட்­டுத் திட்­டம் கைவி­டப்­படப்போவ தில்லை. மாறாக அதற்­கு­ரிய இடம் மாற்­றப்­ப­டு­வ­தற்கே சந்­தர்ப்­பம் உள்­ளது என்று தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் யாழ்ப்­பாணப் பிராந்­தி­யக் காரி­யா­ல­யம் தெரி­வித்­துள்­ளது.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,

இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பு­டன் தலா 5 இலட்­சம் பெறு­ம­தி­யான 24 வீடு­கள் அமைப்­ப­தற்­கான திட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு வழங்­கப்­பட்­டது.அந்தத் திட்­டத்தை யாழ்ப்­பா­ணம், காரை­ந­கர் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட மடத்து வளவுப் பிர­தே­சத்­துக்கு வழங்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அந்­தப் பகு­தி­யில் உள்ள 6 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யின் மாதி­ரிக் கிரா­மத்துக்குச் சொந்­த­மா­னது. போர்க்­காலச் சூழ்­நி­லை­யில் அங்கே 44 குடும்­பங்­கள் வாழ்ந்­துள்­ளன. அங்கே வாழ்ந்­த­வர்­கள் தற்­போது காரை­ந­க­ரைச் சூழ­வுள்ள மூளாய், பண்­டத்­த­ரிப்பு, பொன்­னாலை போன்ற பகு­தி­க­ளில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

எனவே அவர்­க­ளுக்கு வீடு­கள் அவ­சி­ய­மா­கும். ஆகவே மடத்து வள­வுப் பகு­தி­யில் இந்த 24 வீடுகள் திட்டத்தை வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.குறித்த 6 பரப்­பு­டன் சேர்த்­துக் குறிப்­பிட்ட ஏக்­கர் நிலப்­ப­ரப்பை கடற்­ப­டை­யி­னர் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­துள்­ள­னர். அந்த வகை­யில் ஆரம்­பத்­தில் அந்­தக் காணியை கடற்­ப­டை­யி­னர் வழங்­கு­வ­தாக தெரி­வித்த போதி­லும் தற்­போது அதற்­கான பேச்சு வார்த்­தை­கள் நடை­பெற்று வரும் நிலை­யில் அந்­தக் காணியை வழங்­கு ­வ­தற்கு கால நீடிப்பு தேவைப்­ப­டு­கின்­ற­தாகத் தெரி­கின்­றது.

ஆனால் இந்­திய அர­சின் இந்தத் திட்­டத்தை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்­டிய தேவை உள்­ளது. நவம்­பர் மாத இறு­திக்­குள் அத்­தி­பா­ரம் போடும் பணி ஆரம்­பிக்கப்பட வேண்­டும் என்ற கட்­டா­யம் உள்­ளது.

இந்த நிலை­யில் உட­ன­டி­யான தேவைக்கு மடத்து வளவு காணியைப் பயன்­ப­டுத்த முடி­யாது. ஆகவே காரை­ந­கர் பிர­தே­சத்­தில் வேறு ஒரு காணியை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பிர­தேச செய­லர் மேற்­கொண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார். ஆகவே இந்­திய வீட்டுத் திட்­டம் கைவி­டப்­ப­டாது என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a comment