ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொள்ள முடியாது – மஹிந்த

342 0

mahintha 647dqஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆம் நிறைவாண்டு நிகழ்வு இடம்பெறுகின்ற தினத்தில் தாம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க மகிந்த ராஜபக்ஷ விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அன்னம் சின்னத்தில் போட்டியிடக்கூடும்.

எனினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே போட்டியிடவுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.