இன்று காலை வரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் 1800 பேர் கைது

208 0

நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் நேற்றிரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவர்களில் சந்தேகத்தின் பேரில் 962 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 758 பேரும் ஏனைய குற்றச் செயல்களுடன் தேடப்பட்டு வந்த 86 பேரும் அடங்குவதாகவும் தலைமையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment