யோசித்தவின் பாட்டி நிதிமோசடி தவிர்ப்பு காவல்துறையில் முன்னிலையாவார்.

294 0

thumb_large_Yoshitha-Rajapaksaயோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டேசி பொரஸ்டி எதிர்வரும் 31 ஆம் திகதி காவல்துறையில் முன்னிலையாவார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
கல்கிசை பிரதேசத்திலுள்ள காணி ஒன்று தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காக காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவுக்கு, முன்னதாக அவர் அழைக்கப்பட்டிருந்தார்
எனினும் அவர் முன்னிலையாக நிலையில் நேற்று கோட்டை நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன்போது அவரை நீதிவான் சொந்தப்பிணையில் செல்ல அனுமதித்தார்.
இதன்போது அவரின் சட்டத்தரணி, உடல் நலத்துக்கமைய எதிர்வரும் 31ஆம் திகதி டேசி பொரஸ்டி வாக்குமூலத்தை வழங்குவதற்காக நிதிமோசடி தவிர்ப்பு காவல்துறையில் முன்னிலையாவார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.