பண்டாரவளையில் “போரா 12″ உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

240 0

பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் நேற்று அதிகாலை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பொலிஸார் அனுமதிப் பத்திரமற்ற ‘போரா 12’ ரக உள்நாட்டு துப்பாக்கியொன்றினை மீட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிட்ட போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த 03 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment