இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

441 0

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் முச்­சந்­தியில் சில நலன்­வி­ரும்­பிகள் இணைந்து வழி­காட்டி குறி­யீட்­டுடன் கூடிய சுவா­மியின் (சமன்­தெய்யோ) உரு­வப்­படம் அடங்­கிய பதா­கையினை செய்­

தி­ருந்­தனர். அப் பதா­கையினை சில தினங்­க­ளுக்கு முன்னர் விஷ­மிகள் கிழித்து எறிந்­துள்­ளனர்.  மேற்­கு­றித்த சம்­ப­வத்­தினை இப்­ப­குதி முஸ்­லிம்­களே செய்­துள்­ள­தாக கூறி ஒரு குழு­வினர் வதந்­தியை கிளப்­பி­விட்­ட­துடன் அதற்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்ள ஆயத்­தங்கள் செய்­

தி­ருந்­தனர். இதனால் இப்­ப­கு­தியில் பதற்­ற­மான சூழல் காணப்­பட்­ட­தோடு பொலி­ஸாரும் காவல் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதன்­போது, மேற்­படி சம்பவம் தொட ர்­பாக நாவ­லப்­பிட்டிபொலிஸார் மேற்­கொண்ட புலன் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து குறித்த சம்­ப­வத்­தினை பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த நான்கு பேரே நிறைந்த மது வெறியில் தெய்­வத்தின் உருவம் என்­று­கூட தெரி­யாமல் கிழித்து எறிந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நால்­வரில் இரு­வரை கைது செய்து  நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜே­சே­கர முன்­னிலையில் கடந்த 7 ஆம் திகதி ஆஜர்­ப்ப­டுத்­தியபோது குறித்த நபர்

களை இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படியும் நீதிவான் உத்த ரவிட்டார்.

Leave a comment