மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில்
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமது தேவை களை நிறைவேற்றிக்கொள்ள கொழும்பு நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க நேரிடுவது தொடர்பில் மக்கள் பல தடவைகள் முறையிட்டுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்றனர், இவர்கள் விசா மற்றும் ஏனைய தேவைகளுக்கு இந்திய தூதரகத்தை நாட வேண்டுமானால் அவர்கள் கொழும்புக்கே செல்ல வேண்டியுள்ளது, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயின் கிழக்கில் இந்தியத் துணைத் தூதரகமொன்றை ஆரம்பிக்காமல் இருப்பதில் எவ்வித நியாயத்தன்மையும் இல்லை,
கிழக்கில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் தமது ஆன்மீகக் கடமைகளுக்கு் இந்தியா செல்கின்றனர். இதற்கான பயணங்களை முன்னெடுக்க அவர்கள் கொழும்புக்கும் கிழக்குக்குமாக பஸ்களில் அலைந்து திரிய வேண்டியுள்ளது, ஆகவேஇந்த நிலைமை மாற்றப்பட மட்டக்களப்பில் இந்தியத் துணைத் தூதரகமொன்று அமைக்க வேண்டும்,
இதேவேளை நாம் கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இருக்கும்போது முன்வைத்த திட்டங்களுக்கமைவாக இன்று மட்டக்களப்பில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்,