15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த (21 வயது) இளைஞரான முச்சக்கரவண்டி சாரதியை பிணையில் செல்ல அனுமதித்த கண்டி நீதிமன்ற நீதிவான் விசாரணையை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்தார்.
தலாத்து ஓயா பொலிஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
தலாத்து ஓயா பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிசாரதி 15 வயது சிறுமி ஒருவருடன் நீண்டகாலமாக காதல் கொண்டிருந்துள்ளார்.
இருவரும் மிக நெருக்கமாக பழகிவந்த நிலையில் அண்மையில் முத்துகெலியாவ வாவி பகுதியை பார்வையிட சென்றிருந்த போது முச்சக்கரவண்டி சாரதியான இளைஞர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் சில தினங்களுக்கு முன்னர் தலாத்து ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித் தார்.