கப்பலில் வந்த எரிபொருள் தொடர்பில் ஆராய்வு

4642 0

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் தற்போது பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை இன்று மதியம் கிடைக்கும் என எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை கிடைத்தவுடன், முத்துராஜவெல களஞ்சிய சாலையில் இருந்து பெற்றோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம்  17ஆம் திகதி எல்.ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரம் குறைந்தது என தெரிவித்து அதனை திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன் காரணத்தினால் நாட்டில் பாரிய அளவில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment