நாய்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

328 0

சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்துக்குள் வருவதில் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுற்றுலா பயணிகள் மற்றும் வழிக்காட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீகிரிய புதிய நகர், பொது வாகன தரிப்பிடம் மற்றும் சீகிரிய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாது விடத்து சுற்றுலா தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுலா வழிக்காட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment