கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு நேற்று வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திக்கு ஓர் நிரந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஓர் நிரந்தர சுகாதார பணிப்பாளரை நியமிக்குமாறு நாம் மத்திய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இறுதியில் அதற்கு தகுதியானவர்களின் பெயர்களையும் பரிந்துரைத்தோம். இறுதியில் இன்று அது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராகவுள்ள வைத்தியக் கலாநிதி குமரவேல் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் படிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வெற்றிடம் அடுத்த வாரம் முதல் நிரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றார்.
வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு நேற்று வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திக்கு ஓர் நிரந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஓர் நிரந்தர சுகாதார பணிப்பாளரை நியமிக்குமாறு நாம் மத்திய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இறுதியில் அதற்கு தகுதியானவர்களின் பெயர்களையும் பரிந்துரைத்தோம். இறுதியில் இன்று அது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராகவுள்ள வைத்தியக் கலாநிதி குமரவேல் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் படிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வெற்றிடம் அடுத்த வாரம் முதல் நிரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றார்.