பல மாகாணங்களில் இன்று மாலையும் பலத்த மழை

233 0

இன்று மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment