மன்னாரில் நாளை நீர்விநியோக தடை

374 0

indexமன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக நாளைய தினம் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் நாளைய தினம் காலை 8 மணி முதல் மாலை  5 மணி வரை நீர் துண்டிப்பு இடம் பெறும் என மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.