நல்லிணக்க செயலகத்தின் கால எல்லை நீடிப்பு

216 0

நல்லிணக்க செயலகத்தின் கால எல்லையினை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் சாதாரண பொது மக்களை அறிவுறுத்தி திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, அச்செயலகத்தின் கால எல்லையினை 2019-03- 31ம் திகதி வரை நீடிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக 2015ம் ஆண்டிலிருந்து 02 வருடங்களுக்கு அமுலாகும் வகையில் நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் (Secratariat for Coordinating Reconciliation Mechanisms – SCRM) ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment