புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமை தொடர்பில் மக்களுக்கு மற்றும் பொது அமைப்புகளுக்கு உடனடியாக தெளிவுப்படுத்தும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார ஆகியோர் கூட்டாக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.