எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் யாழில் 

224 0
எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான ஐந்து பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் இதனை தெரிவித்துள்ளார்..
எயிட்ஸ் நோய் தொற்று காரணமாக இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 250 பேர் வரையில் பாதிக்கப்படுகின்றனர்.
அதில் 25 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
எயிட்ஸ் தொற்று காரணமாக கடந்த 1987 ம் ஆண்டிலிருந்து இன்று வரை  90 ற்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இனங்காணப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Leave a comment