தொடரூந்து மோதி மாணவன் பலி 

213 0
வவுனியாவில் கடுகதி தொடரூந்தில்; மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்;தசம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடரூந்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தொடரூந்து வீதியில் சென்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment