புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்ன

208 0

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட, சரணடைந்த போராளிகள் பொதுமக்களைப் படுகொலை செய்தார்- போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து, எலிய என்ற அமைப்பின் ஊடாக, புதிய அரசியலமைப்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறார்.

கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை கம்பகாவில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Leave a comment