துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை!

264 0

யாழ்ப்பாண மாவட்டம் அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமைள் உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்களால் குறித்த இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முதுகில் படுகாயமடைந்த இளைஞனின் நுரையீரல் பாதிப்படைந்ததுடன் அதிகளவு இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளைஞன் மரணமடைந்தார்.

அரியாலை உதயபுரத்தைச் சேர்ந்த டொன்பொஸ்கோ ரிட்மன் என்ற 25 வயது இளைஞனே மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இதுவரை எவருமே கைதுசெய்யப்படவில்லை.

Leave a comment