வீதி விபத்து – ஒருவர் பலி

1619 0

ஆராச்சிகட்டுவ – விஜயகட்டுபொத பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானார்.

நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லொறி ரக வாகனமொன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில், உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உடப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment