காட்டு யானை தாக்கி இருவர் பலி

697 0

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி, இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் பலியாகினர்.

அக்கரைப்பற்று – முல்லிக்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வயலுக்குச் சென்ற வேளையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் 55 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கஹடகஸ்திகிலிய – மஹபொதான பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நேற்றிரவு மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.

Leave a comment