போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைது

206 0

திருகோணமலை- 04ம் கட்டை  மதுபான சாலைக்கு முன்னால் 40 போதை மாத்திரைகளுடன் இரண்டு பேரை நேற்று மாலை (23) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை சோதனையிட்ட போது இருவரிடமும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-செல்வநாயகபுரம் பகுதியைச்சேர்ந்த சிவசுப்பரமணியம் ரதன் (21வயது) மற்றும் உப்புவௌி-வேலாங்கன்னி வீதியைச்சேர்ந்த டேவிட் பியதர்ஷன் (24வயது) எனவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை தலையைக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment