யாழ் துப்பாக்கி சூட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை குழுக்கள் நியமனம்

232 0

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இனந்தெரியா நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ளவர் 27 வயதுடைய, உதயபுரம் பகுதியை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment