அரியாலை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த இளைஞன் மரணம்

330 0

யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி
உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. இன்று(22) இரவு 09.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த
நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதிக இரத்தப்போக்குக் காரணமாகவே அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவித்தன.

Leave a comment